Saturday, 11th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

செல்வமுத்து மாரியம்மன் கோவிலில் மண்டலபூஜை நிறைவுவிழா

நவம்பர் 11, 2023 11:26

மல்லசமுத்திரம்: மேல்கல்லுபாளையம் கிராமத்தில் உள்ள செல்வமுத்துமாரியம்மன் கோவிலில் நேற்று, மண்டலபூஜை நிறைவுவிழா கோலாகலமாக நடந்தது.

மல்லசமுத்திரம் ஒன்றியம், மேல்கல்லுபாளையம் கிராமத்தில் புதிதாக கட்டபட்டுள்ள செல்வமுத்து மாரியம்மன், மதுரைவீரன், ஓம்காளியம்மன் உள்ளிட்ட கோவில்களில் கடந்த 10 ஆம்தேதி, கும்பாபிசேகவிழா வெகுவிமர்சியாக நடந்தது. அதனையொட்டி, கடந்த 12 தினங்களாக மண்டலபூஜை நடந்து வந்தது.

இந்நிலையில் மண்டலபூஜையின் நிறைவுவிழாவான நேற்றுமுன்தினம் பகல் 12மணிக்கு சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டடு பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த எண்ணற்ற மக்கள் கலந்துகொண்டனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

தலைப்புச்செய்திகள்